Thursday, August 15, 2019
இன்று 15/08/19 வியாழக்கிழமை 73 வது சுதந்திர தின விழா கோலாகளமாக நடைப்பெற்றது.தலைமையாசிரியர் அவர்கள் மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார்,வரவேற்புரையை உதவி தலைமையாசிரியர் அவர்களும்,தலைமை உரையை தலைமையாசிரியர் அவர்களும்,முன்னிலை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அவர்களும் ,சிறப்புரையை சக ஆசிரியர்களும் நன்றியரை பட்டதாரி உதவி தலைமையாசிரியர் அவர்களாலும் இந்நிகழ்வு இனிதே நடைப்பெற்றது.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும்,பல்வேறு போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
Friday, August 9, 2019
இன்று 09/08/19 பனப்பாக்கம் லயன்ஸ் கிளப் சார்பில் சிகரம் தொடு என்ற நிகழ்ச்சியின் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சி வழங்கப்பட்டது .இந்த விழாவினை தலைமையாசிரியர் அவர்கள் துவக்கி வைத்தும்,உதவி தலைமையாசிரியர் அவர்கள் நன்றியுறையும் வழங்கினார்...இந்த நிகழ்ச்சியை கருணாகரன் அவர்கள் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது...
இன்று (08/08/19) தேசிய குடற் புழு நீக்க தினத்தையொட்டி தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியர் அவர்கள் மாணவர்களுக்கு அல்பென்டசோல் வழங்கி விழிப்பணர்வு ஏற்படுத்தினர்.இதனைத்தொடர்ந்து வகுப்பாசிரியர்கள் அனைவரும் தங்களுடைய வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் மாத்திரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதற்கான புகைப்படம்.....
Thursday, August 8, 2019
Friday, August 2, 2019
Subscribe to:
Posts (Atom)

































