Tuesday, September 24, 2019

இன்று 07/09/19 நம் பள்ளியில் முப்பெரும் விழா நடைப்பெற்றது.முதல் விழாவாக ஆங்கில மன்றம்(ENGLISH CLUB) துவங்கப்பட்டது.இவ்விழாவிற்கு சிறப்புரையாற்ற முனைவர் T.புஷ்பநாதன் அவர்கள் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.இரண்டாவது விழாவாக பனப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக உலக மக்கள் தொகை தின விழாவும் மற்றும் குடும்ப கட்டுப்பாட்டின் அவசியத்தை பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இதில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என அனைத்து பணியாளர்களும் கலந்துக்கொண்டனர்.மூன்றாவது நிகழ்வாக அறிவியல் மன்றம் துவங்கப்பட்டது.இதில் திரு R.பழனி பட்டதாரி ஆசிரியர் அவர்கள் மற்றும் சக அறிவியல்ஆசிரியர்கள் அனைவரும் அறிவியலின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இந்த மூன்று விழாவிற்கும் தலைமையேற்று நடத்தி கொடுத்த தலைமையாசிரியருக்கும் நன்றியுரை வழங்கிய உதவி தலைமையாசிரியர் அவர்களுக்கும் ஆர்வம் காட்டிய மாணவர்களுக்கும் இதற்கெல்லாம் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி...













Monday, September 23, 2019

இன்று 07/09/19 நம் பள்ளியில் swatch pakhwada நிகழ்வின் ஒரு பகுதியாக பள்ளியின் மைதானம் மற்றும் சுற்றுப்புறத்தை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தூய்மை செய்தனர்..








இன்று 05/09/19 நம் பள்ளியில் ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.காலையில் சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.மாலை நேரத்தில் ஆசிரியர்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டது.இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் திரு.அ.கமலக்கண்ணன் அவர்களும் பெண்கள் பிரிவில் திருமதி கே.எஸ்.சாந்தி அவர்களும் வெற்றிப் பெற்றனர்.பிறகு அனைவருக்கும் பனப்பாக்கம் சாருமதி கேஸ் ஏஜென்சி நிறுவனர் அவர்கள் பரிசுகள் வழங்கி ஆசிரியர்களை கௌரவித்தார்..ஆசிரியர் தின விழா தலைமையாசிரியர் தலைமையில் இனிதே நிறைவடைந்தது.. பிறகு விழாவின் இறுதியில் பாதுகாப்பான முறையில் எரிவாயுவினை பயன்படுத்துவதைப் பற்றி சாருமதி கேஸ் ஏஜென்சி சார்பாக செயல்முறை விளக்கம் விழிப்புணர்வு தரப்பட்டது....